×

தூத்துக்குடியில் போலீஸ் இரவு நேர ரோந்து பணி

தூத்துக்குடி, ஜூலை 9: தூத்துக்குடியில் காவல் துறையினரின் இரவு ரோந்து பணியை மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகரில் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் தினசரி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பிரதான சாலைகளில் மட்டுமே இந்த ரோந்து பணிகள் நடைபெற்று வருகிறது. உட்புற சாலை மற்றும் தெருக்களில் ரோந்து பணி இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட எஸ்பி.பாலாஜி சரவணன், நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனை சந்திப்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நேரில் சென்று காவல் துறையினரின் இரவு ரோந்து பணிகளை ஆய்வு செய்து அவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம்ஆனந்த் உள்ளிட்ட காவல் துறையினர் உடனிருந்தனர்.

The post தூத்துக்குடியில் போலீஸ் இரவு நேர ரோந்து பணி appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Thoothukudi ,SP ,Balaji Saravanan ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி டவுன் கண்ட்ரோல் ரூமில் புதிதாக சிசிடிவி கேமரா அமைப்பு