×

திருச்சுழியில் பேக்கரிக்குள் புகுந்த நல்லபாம்பு: தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்

 

திருச்சுழி, ஜூலை 9: திருச்சுழியில் பேக்கரிக்குள் நல்ல பாம்பு புகுந்ததால் வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் நரிக்குடி சாலையில் தனியார் பேக்கரி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வாடிக்கையாளர்கள் பிரெட், இனிப்பு, கார வகைகளை வாங்கிக்கொண்டிருந்தனர். மேலும் சிலர் டீ குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது பேக்கரிக்குள் திடீரென ஒரு நல்ல பாம்பு புகுந்தது.

இதனை பார்த்து அச்சமடைந்த வாடிக்கையாளர்கள் பேக்கரியில் இருந்து அலறியடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர். உடனடியாக, பேக்கரி ஊழியர்கள் அந்த பாம்பை விரட்ட முயன்றும் முடியவில்லை.இது குறித்த தகவலின்பேரில் திருச்சுழி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் முனீஸ்வரன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பேக்கரியில் இருந்து சுமார் ஐந்தரை அடி நீளமுள்ள நல்ல பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பினை பாதுகாப்பாக வனப்பகுதியில் விடுவித்தனர்.

The post திருச்சுழியில் பேக்கரிக்குள் புகுந்த நல்லபாம்பு: தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர் appeared first on Dinakaran.

Tags : Trishi ,Narikudi Road ,Thiruchuzhi, Virudhunagar district ,
× RELATED திருச்சி NIT விவகாரம் : மாணவிகளிடம்...