×

நாளை மக்கள் தொடர்பு முகாம்

 

சிவகங்கை, ஜூலை 9: திருப்பத்தூர் அருகே ஆத்திரம்பட்டி கிராமத்தில் நாளை மக்கள் தொடர்பு முகாம் நடக்க உள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: திருப்பத்தூர் தாலுகா, இளையாத்தங்குடி உள்வட்டம் ஆத்திரம்பட்டி கிராமத்தில், நாளை காலை 10மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது.

அரசு துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, தகுதி வாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே முகாமின் நோக்கமாகும். எனவே, மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு, பயன்பெறலாம்.

The post நாளை மக்கள் தொடர்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Athrampatti ,Tirupathur ,Collector ,Asha Ajith ,Tirupathur taluk ,Ilayathankudi ,Athrampatti village ,
× RELATED திருப்பத்தூர்,சிவகங்கை வட்டாரத்தில் இன்று மக்களுடன் முதல்வர் முகாம்