×

மனைவியுடன் தகராறு எதிரொலி: மதுவில் விஷம் கலந்து குடித்து கணவர் சாவு

மதுரை, ஜூலை 9: மதுரை எஸ்.எஸ்.காலனி நேரு நகரை சேர்ந்தவர் சவுந்தரபாண்டி(37). இவர் தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதற்கு அதிக பணம் தேவைப்பட்டதால், மனைவி அம்பிகாவையும் வேலைக்கு செல்லும்படி கூறி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கணவரின் குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்து வெளியே சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை.

அவர் மாடக்குளம் மருது பாண்டியர் நகர் ரயில்வே கேட் அருகே மது குடித்துக்கொண்டு இருப்பதாக, அப்பகுதி சிறுவர்கள் சிலர் மனைவியிடம் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு மனைவி சென்றபோது, கணவர் மதுவில் விஷம் கலந்து குடித்திருப்பது தெரியவந்தது. அவரை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி அப்பகுதியினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மதுவில் அதிக அளவில் விஷம் கலந்து குடித்திருந்தால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அம்பிகா அளித்த புகாரின் பேரில், எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மனைவியுடன் தகராறு எதிரொலி: மதுவில் விஷம் கலந்து குடித்து கணவர் சாவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Soundarabandi ,SS Colony Nehru Nagar, Madurai ,Ambika ,
× RELATED அலங்கார நுழைவாயில்களை...