×

காஷ்மீரில் ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் 4 வீரர்கள் வீர மரணம்

ஜம்மு: காஷ்மீரின், கதுவா மாவட்டத்தில் ராணுவ வாகனங்கள் மீது கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இதில், 4 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். 6 பேர் படுகாய
மடைந்தனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத்தில் பனிலிங்கத்தை தரிசிக்கும் புனித யாத்திரை கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கியது. புனித யாத்திரைக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் செல்வதால் ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், காஷ்மீரின் கதுவா மாவட்டம், மச்செடி-கிண்ட்லி-மல்ஹார் சாலையில் நேற்று மாலையில் ராணுவத்தினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பட்னோட்டா என்ற கிராமத்திற்கு அருகே ராணுவ கான்வாய் வந்த போது கையெறி குண்டுகளை வீசி தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த தாக்குலில் 10 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில்.4 வீரர்கள் வீரமரணமடைந்தனர். ராணுவம் மீது தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் அருகில் உள்ள காட்டுக்குள் சென்று ஓளிந்துள்ளனர். இதையடுத்து காஷ்மீரின் பிற பகுதிகளில் இருந்து ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கதுவா மாவட்டத்தில் சமீப நாட்களில் நடந்த 2வது பெரிய தீவிரவாத தாக்குதலாகும் இது. ஜம்முவில் தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் அண்மையில் அதிகரித்துள்ளன.காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்தோடு பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி இந்தியாவுக்குள் நுழைந்துள்ள தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபடுகின்றனர் என்று அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

The post காஷ்மீரில் ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் 4 வீரர்கள் வீர மரணம் appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Jammu ,Kathua district ,Bani Lingam ,Amarnath ,Dinakaran ,
× RELATED ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சி அமையும்: ராகுல் காந்தி பேச்சு