×

ஆதார் தகவல்களை கையாள்வதற்கு ஒன்றிய அரசுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: ஆதார் தகவல்களை ஒன்றிய அரசு கையாள்வதற்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டுள்ளது. ஆதார் அட்டைக்கு என தனிப்பட்ட ஒருவரின் புகைப்படம், கைரேகை, கண்ணின் கருவிழி ஸ்கேன் ஆகியவற்றின் பதிவுகள் மேற்கொண்டு தற்போது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற பயோமெட்ரிக் பதிவுகள் இருப்பதால் எந்த பிரச்சனையும் ஏற்பட வாய்ப்பில்லை என மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது. இதையடுத்து ஆதார் எண்ணை மத்திய மாநில அரசுகள் சமையல் கேஸ்சில் தொடங்கி ரயில் ,விமான பயனச்சீட்டு, வங்கி கணக்கு, வருமான வரி கணக்கு, செல்போன் இணைப்பு என அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என நடு முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.அதில்,\\” ஆதார் தகவல்கள் பாதுகாப்பான முறையில் சேகரிக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்தும் வரை அதன் தகவல்களை ஒன்றிய அரசு கையாள்வதற்கு தடையோ அல்லது இடைக்காலமாக நிறுத்தி வைக்கவோ வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆதார் விவகாரத்தில் முன்னதாக உச்ச நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது. சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தேவைப்பட்டால் உயர்நீதிமன்றங்களை நாடி கோரிக்கை வைக்கலாம் என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தார்.

The post ஆதார் தகவல்களை கையாள்வதற்கு ஒன்றிய அரசுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Union government ,New Delhi ,Dinakaran ,
× RELATED மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில்...