×

வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி தாய், மகன் பலி

ஊட்டி: குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியை சேர்ந்தவர் மெஹருண் (65). இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விறகு சேகரிப்பதற்காக அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார். அங்கு உயரழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது. இதனை பார்க்காமல் அதில் காலை வைத்த நிலையில் மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தார். அவரை மகன்கள் பைரோஸ் (45), முபாரக் ஆகியோர் கடந்த இரு நாட்களாக தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் தாயைத் தேடி பிரோஸ் சென்றார். அப்போது தனது தாய் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அவரை தூக்குவதற்காக அருகில் சென்றுள்ளார். அப்போது அறுந்து கிடந்த மின் கம்பியை அறியாமல் பைரோஸ் காலை வைத்தார். அதில் அவரையும் மின்சாரம் தாக்கி உள்ளது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி தாய், மகன் பலி appeared first on Dinakaran.

Tags : Mehrun ,Kateri ,Coonoor ,Dinakaran ,
× RELATED சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு