×

பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி செங்கம் அருகே அதிகாலை பரிதாபம்

செங்கம், ஜூலை 8: செங்கம் பஸ் நிலையத்தில், சீட் பிடிக்க முயன்றபோது பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாபமாக பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்புழுதியூர் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன்(35). நேற்று அதிகாலை 4 மணி அளவில் செங்கம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்த இவர், அங்கிருந்து போளூர் நோக்கி சென்ற அரசு பஸ்சில் சீட் பிடிப்பதற்காக முயன்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக தவறி விழுந்த சிலம்பரசன் பஸ் சக்கரத்தில் சிக்கிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து தகவலறிந்த செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்பட்ட அரசு பஸ்சை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விடியற்காலை நடந்த இந்த விபத்து அங்கிருந்த மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

The post பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி செங்கம் அருகே அதிகாலை பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Sengam ,Silambarasan ,Mellupudiyur ,Tiruvannamalai district ,
× RELATED புற்றுநோயால் உயிரிழந்த போலீஸ்காரர்...