×

லாரி டிரைவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது

தூத்துக்குடி, ஜூலை 8: தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார்புரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (44), லாரி டிரைவரான இவர் நேற்று முன்தினம் அங்குள்ள கெபி முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சபரிமுத்து மகன் செல்லத்துரை (37) என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் செல்லத்துரை ஆத்திரமடைந்து செல்வ ராஜுவை சரமரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து செல்லத்துரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post லாரி டிரைவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Selvaraj ,Anthoniyarpuram ,Kebi ,Sabarimuthu ,Chellathurai ,Dinakaran ,
× RELATED உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில்...