×

அருணாச்சலா கலைக்கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

 

நாகர்கோவில், ஜூலை 8: வெள்ளிச்சந்தை அருகில் உள்ள அருணாச்சலா கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியில் ஐஐசி மற்றும் வணிக நிர்வாகத்துறை சார்பில் எத்திக்கல் ஹேக்கிங் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு கல்லூரி தலைவர் கிருஷ்ணசுவாமி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் விஜிமலர் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளர் எட்வின் ஆன்றனி கலந்து ெகாண்டு சைபர் ஹேக்கிங் தொடர்பான மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார். இந்த நிகழ்ச்சியில் வணிக நிர்வாகத்துறை தலைவர் காயத்ரி நாயர் நன்றி கூறினார். ஐஐசி ஒருங்கிணைப்பாளர் பிரியதர்ஷினி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

The post அருணாச்சலா கலைக்கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Awareness Seminar ,Arunachal Arts College ,Nagercoil ,Hacking ,IIC ,Department of Business Administration ,Arunachal Arts and Science College for Women ,Vellichandi ,College ,President ,Krishnaswami ,Dinakaran ,
× RELATED தேசிய தொழிலாளர் மையம் சார்பில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்