×

பட்டதாரி பெண் மாயம்

 

புவனகிரி, ஜூலை 8: பரங்கிப்பேட்டை அருகே உள்ள பு.முட்லூர் மெயின்ரோடு அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகள் சத்யா(27). இவர் எம்.பில் பட்டதாரி. கடந்த 4ம் தேதி அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற சத்யா, பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சத்யாவின் தாய் பார்வதி, பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பட்டதாரி பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Mayam ,Bhubaneswar ,Jayaraman ,Angalamman Koil Street, Bu. Mudlur Main Road ,Parangippet ,Satya ,M.Phil ,Pattadari Pen Mayam ,
× RELATED காலாப்பட்டு அருகே ஆண் நண்பர்களுடன் கடலில் குளித்த உ.பி. மாணவி மாயம்