×

அரசு ஊழியருக்கு தொந்தரவு ஓய்வு எஸ்.ஐ மீது வழக்கு பதிவு

 

திண்டுக்கல், ஜூலை 8: அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக, ஓய்வு எஸ்.ஐ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் அருகே வக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

இதன்பேரில், ஆத்தூர் தாசில்தார் வடிவேல் முருகன் தலைமையில், தலைமை நில அளவையர் அருண்பாண்டியன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் வக்கம்பட்டிக்கு நேற்று முன்தினம் வந்தனர். அவர்கள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார் வந்த இடத்தை பார்வையிட்டு அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.ஐ பெருமாள் (60), தலைமை நில அளவையரை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தாலுகா ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஓய்வு எஸ்.ஐ பெருமாள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரசு ஊழியருக்கு தொந்தரவு ஓய்வு எஸ்.ஐ மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : SI ,Dindigul ,Vakkampatti ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்-கரூர் ரோடு...