×

கஞ்சா விற்ற பெண் கைது

உத்தமபாளையம், ஜூலை 7: தேவாரம் அருகே கஞ்சா விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேவாரம் அருகே அழகர்நாயககன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுளா(38). இவர் அழகர்நாயக்கன்பட்டி – பல்லவராயன்பட்டி சாலையில், கஞ்சா விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மஞ்சுளாவிடம் இருந்த 200 கிராம் கஞ்சா, மற்றும், விற்பனை செய்த பணம் ரூ.22,500 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக, தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மஞ்சுளாவை கைது செய்தனர்.

The post கஞ்சா விற்ற பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Uthampalayam ,Devaram ,Manjula ,Alagaranayakaganpatti ,Dewaram ,Alagaranayakanpatti ,Pallavarayanpatti road ,Dinakaran ,
× RELATED ரயிலில் சென்றவர் தவறி விழுந்து சாவு