×

நீட் தேர்வு குற்றச்சாட்டுகள் தொடர்வதால் தேசிய தேர்வு முகமையை கலைத்திட வேண்டும்

திருவாரூர், ஜூலை 7: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட குழு கூட்டம் திருவாரூரில் மாநில குழு உறுப்பினர் சரவணன் தலைமையிலும், மாவட்ட செயலாளர் அருள் ராஜன் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் நாகை எம். பி. வை செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் (பொ) கேசவராஜ், இளைஞர் பெருமன்றத்தின் மாநில செயலாளர் பாரதி, மாநில குழு உறுப்பினர் நல்ல சுகம் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.இதில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்திட வேண்டும் என்பதுடன் நடப்பாண்டிலேயே சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உயர்கல்வி மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும். நீட் தேர்வு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதால் இதற்கு பொறுப்பு வைக்கும் தேசிய தேர்வு முகமையை உடனடியாக கலைத்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post நீட் தேர்வு குற்றச்சாட்டுகள் தொடர்வதால் தேசிய தேர்வு முகமையை கலைத்திட வேண்டும் appeared first on Dinakaran.

Tags : NEET ,NATIONAL SELECTION AGENCY ,Thiruvarur ,All India Youth Federation ,Thiruvaroor ,State Committee ,Saravanan ,District Secretary ,Arul Rajan ,Nagai M. B. Vai Selvaraj ,Communist Party of India ,NCA ,Dinakaran ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கர் பரப்பில் குறுவை சாகுபடி