×

கல்லாக்கோட்டை ஊராட்சியில் தென்னையில் ஊடுபயிராக கடலை சாகுபடி

கந்தர்வகோட்டை, ஜூலை 7: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் கல்லாக்கோட்டை ஊராட்சியில் தென்னை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ஊடுபயிராக கடலை, உளுந்து சாகுபடி செய்து அசத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் கல்லாக்கோட்டை ஊராட்சியில் விவசாயிகள் பயிர் செய்யும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் எந்ததொரு அரசு தொழிற்சாலைகளும், தனியார் தொழிற்சாலைகளும் இல்லாததால் விவசாயிகள் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்வாதாரத்தை நகர்த்தி வருகிறார்கள். விவசாய நேரம் போக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்ட பணிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஒன்றிய அரசு 100 நாள் வேலைத்திட்டத்தை படிப்படியாக குறைத்து வருவதால் பொதுமக்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவ தாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மேலும் தென்னை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் அதில் ஊடுபயிராக கடலை, உளுந்து சாகுபடி செய்து விவசாயத்தில் அசத்தி வருகிறார்கள் . வெளிமாவட்டதைச் சேர்ந்த மக்கள் இதனை கண்டு வியந்து பார்க்கும் வண்ணம் விவசாய புரட்சி செய்வதில் இப்பகுதி விவசாயிகள் உள்ளனர். விவசாயிகளுக்கு வேளாண்மை துறையின் தகுந்த ஆலோசனை வழங்கி விவசாயம் செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

The post கல்லாக்கோட்டை ஊராட்சியில் தென்னையில் ஊடுபயிராக கடலை சாகுபடி appeared first on Dinakaran.

Tags : Kallakottai panchayat ,Gandharvakottai ,Gandharvakothai panchayat ,Pudukottai District ,Kandarvakothai Panchayat Union ,
× RELATED கந்தர்வகோட்டையில் ஓவிய போட்டியில்...