×

இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் குளறுபடியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 

தஞ்சாவூர், ஜூலை 6: தஞ்சாவூர் மாவட்ட இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் குளறுப்படியை கண்டித்து தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர் அரவிந்தசாமி கண்டன உரையாற்றினார். மேலும் மாவட்ட தலைவர் அர்ஜுன் மாவட்ட செயலாளர் சந்துரு, மாவட்டக்குழு உறுப்பினர் எடிசன், கிளை தலைவர் பிரேம்குமார், தலைவர் ரஞ்சித் கிளை நிர்வாகிகள் சரோஜினி, நேஹா, பிரியா, அஸ்வின், ஹரிஷ், பிரேம், ரமணா, திலீப், வீரராஜ், வசந்த், ஜோஷ்வா, ஹரிஷ், தரணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் சியுடிஇ, யூஜிசி, நீட் போன்ற நுழைவு தேர்வுகளில் தொடர்ந்து குளறுப்படிகளை செய்யும் நேஷனல் டெஸ்டிங்க் ஏஜென்ஸியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இது ஏராளமான மாணவர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் குளறுபடியை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Indian Students Union ,Thanjavur ,Thanjavur District Indian Students Union ,Thanjavur King Sarabhoji College ,State Secretary ,Aravindaswamy ,District ,President ,Arjun ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூரில் கூட்டுப் பாலியல்...