×

பாமகவினருக்கு வன்முறையில் ஈடுபடுவது மட்டும் தான் தெரியும்

விக்கிரவாண்டி, ஜூலை 3: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சி.வெ.கணேசன், சேகர்பாபு ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வாக்கு சேகரிப்புக்கு பிறகு அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறுகையில், இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது. மு.க.ஸ்டாலின் ஆட்சி நல்லெண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளதாகவும், திமுக அமைச்சர்கள் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பணியாற்றுகிறார்கள். இவர்கள் பல்வேறு தேர்தலில் பணியாற்றியவர்கள் என்பதால் எளிதில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார். பாமகவினருக்கு வன்முறையில் ஈடுபடுவது தான் வேலை. அவர்களுக்கு அது தான் தெரியும். பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவோம் என ஆந்திர முதல்வர் தெரிவித்து உள்ளார். அவர்கள் தடுப்பணை கட்டுவோம் கட்டுவோம் என்பார்கள் நாங்கள் அதனை தடுப்போம் தடுப்போம், என்றார்.

The post பாமகவினருக்கு வன்முறையில் ஈடுபடுவது மட்டும் தான் தெரியும் appeared first on Dinakaran.

Tags : Wikiravandi ,Duraimurugan ,Ponmudi, C. ,Dimuka ,Aniur Shiva ,Vikrawandi midterm elections ,Ganesan ,Sekharbabu ,Minister ,Dimuga ,Pamakavins ,Dinakaran ,
× RELATED காவல்துறை குறித்து அவதூறாக...