×

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைவராக மீண்டும் சண்முகராஜன் தேர்வு

சென்னை: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநில தலைவராக 6வது முறையாக சண்முகராஜன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களில் ஒன்றான தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் 2021-2024 மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் கடந்த 12ம் தேதி சென்னையில் நடந்தது. இந்த தேர்தலை துணை தலைவர் ஆணையர்கள் கிரிதரன், அருணகிரிநாதன் ஆகியோர் நடத்தினர். இந்த தேர்தலில் மாநில நிர்வாகிகள் போட்டியின்றி ஏகமானதாக தேர்வு செய்யப்பட்டனர்.  அதன்படி மாநில தலைவர் சண்முகராஜன், மாநில துணை தலைவர்கள் விக்டர் ராஜா (நகரம்), அரங்க ஆனந்த கிருஷ்ணன் (நகரம்), துரைப்பாண்டி (புறநகரம்), அமிர்தகுமார் (புறநகரம்), என். தண்டபாணி (பொது), சரவணக்குமரன் (பொது), பிரேமா (மகளிர்), ஆலிஸ் ஷீலா (மகளிர்), மாநில பொருளாளர் எஸ்.குமார், அமைப்பு செயலாளர் முரளி, மாநில பிரசார செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாநில தலைமை நிலைய செயலாளர் மகேந்திர குமார் ஆகியோர் போட்டியின்றி ஏகமானதாக தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் அரசு அலுவலர் ஒன்றியம் மாநில தலைவராக  6வது முறையாக சண்முகராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது….

The post தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைவராக மீண்டும் சண்முகராஜன் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Shanmugarajan ,Tamil Nadu Government Servants Union ,President ,Chennai ,Shanmukharajan ,State President ,Tamil Nadu Government Officers Union ,Tamil Nadu government ,Sanmukharajan ,
× RELATED ஈரான் அதிபர் ரைசியின் உடல் இன்று அடக்கம்