×

விசிக நிர்வாகி மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயற்சி: தொழிலாளி கைது

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சூசைநாதன் (49). விசிக கல்வி பொருளாதார விழிப்புணர்வு இயக்க மாவட்ட அமைப்பாளர். இதே கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சின்னதுரை (45) சூசைநாதனின் மனைவி பார்வதியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக சூசைநாதன் நேற்று முன்தினம் சின்னதுரையை கூப்பிட்டு கண்டித்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சூசைநாதன் வீட்டின் முன் கட்டில் போட்டு தூங்கிக்கொண்டு இருந்தார். அதிகாலையில் அங்கு சென்ற சின்னதுரை, பெட்ரோலை சூசைநாதன் மீது ஊற்றி உயிரோடு தீ வைத்து எரித்துள்ளார். இதில் உடல் கருகிய நிலையில் சூசைநாதன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இது குறித்து எலவனாசூர் போலீசார் வழக்கு பதிந்து சின்னதுரையை கைது செய்தனர்.

The post விசிக நிர்வாகி மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயற்சி: தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Tags : Vishik ,Ulundurpet ,Soosainathan ,Erayur ,Kallakurichi district ,Special Education Economic Awareness Movement ,Chinnadurai ,Parvathi ,
× RELATED வங்கி பெண் அதிகாரி கொலை விவகாரம்...