×

அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர் மீது தாக்குதல்

சென்னை: திருவள்ளூரில் இருந்து நேற்று அரசு பேருந்து ஒன்று காஞ்சிபுரம் புறப்பட்டது. திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த சரக்கு ஆட்டோவிற்கு வழி விடவில்லை எனக்கூறி அதன் டிரைவர், அரசு பேருந்தை முந்தி சென்று வழிமறித்து, பஸ் டிரைவர் கார்த்திகேயனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், பஸ் டிரைவரை சரமாரியாக தாக்கினார். பயணிகள் அவரை மடக்கி பிடித்து திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில், கடம்பத்தூர் கசவநல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த சாரதி (20) என்பது தெரிந்தது. அவரை கைது செய்தனர். மேலும், காயமடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் கார்த்திகேயனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்….

The post அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thiruvallur ,Kanchipuram ,Tiruppachur ,Dinakaran ,
× RELATED சென்னை உட்பட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு