டெல்லி: மேற்குவங்க மாநிலம் கஞ்சன் ஜங்காவில் நடந்த ரயில் விபத்துக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். “கஞ்சன் ஜங்கா ரயில் விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. மோடி அரசின் அலட்சியம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவோம். கடந்த 10 ஆண்டுகளில் ரயில் விபத்துகள் அதிகரித்ததற்கு மோடி அரசின் நிர்வாக அலட்சியமே காரணம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
The post மேற்குவங்க மாநிலம் கஞ்சன் ஜங்காவில் நடந்த ரயில் விபத்துக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும்: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி appeared first on Dinakaran.