×

சபரிமலை கோயில் மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வு

திருவனந்தபுரம்: ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. நேற்று காலை 7.30 மணியளவில் உஷபூஜைக்குப் பிறகு மேல்சாந்திகளை தேர்வு செய்வதற்கான நடவடிக்கை தொடங்கின. குலுக்கல் முறையில் நடந்த இந்த தேர்வில் சபரிமலை கோயில் மேல்சாந்தியாக கொல்லம் சக்திக்குளங்கரை பகுதியை சேர்ந்த எஸ். அருண்குமார் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து மாளிகைபுரத்தம்மன் கோயில் மேல்சாந்தியாக கோழிக்கோட்டைச் சேர்ந்த வாசுதேவன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார்.

The post சபரிமலை கோயில் மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வு appeared first on Dinakaran.

Tags : Arunkumar Namboothiri ,Sabarimala ,temple ,Thiruvananthapuram ,Sabarimala Ayyappan ,Aipasi month ,Usha Pooja ,Sabarimala temple ,
× RELATED சபரிமலை கோயில் மேல்சாந்தியாக அருண்குமார் தேர்வு