டெல்லி: நீட் தேர்வுக்கான வினாத்தாள் லீக் ஆனதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக பீகார் போலீஸ் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு மோசடி தொடர்பாக பீகார் மாநில பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி என்.எச்.கான் தகவல். நீட் வினாத்தாள் யாரிடம் இருந்து கிடைத்தது? எப்படி தேர்வு மையங்களை வந்தடைந்தது என விசாரணை. நீட் தேர்வுக்கான வினாத்தாள் லீக் ஆனதை உறுதிப்படுத்த தேசிய தேர்வு முகமையிடம் உண்மையான வினாத்தாள் கோரியுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நீட் தேர்வுக்கான வினாத்தாள் லீக்: பீகார் போலீஸ் பரபரப்பு தகவல்! appeared first on Dinakaran.