×

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ₹19.55லட்சம் உண்டியல் வசூல்

உடன்குடி,ஜூன்15:குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் உண்டியலில் ₹19லட்சத்து 55ஆயிரத்து 986வசூலானது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலிலுள்ள 16உண்டியல்களில் ஒரு மாதம் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நடந்தது. சங்கரன்கோவில் சங்கரநாராயணர்கோயில் துணை ஆணையர், செயல்அலுவலர் கோமதி முன்னிலையில் உண்டியல் திறப்பு நடந்தது. இதில் பக்தர்களின் காணிக்கை ₹19லட்சத்து 55ஆயிரத்து 986 ரொக்க பணமாக கிடைக்கப்பெற்றது. தங்கம் 68கிராம் 700மில்லி கிராம், வெள்ளி 344கிராம் 500மில்லி கிராம் கிடைத்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், கோவில்ஆய்வர் பகவதி, அறங்காவலர்குழு தலைவர் கண்ணன், அறங்காவலர்கள் கணேசன், மகாராஜன், வெங்கடேஸ்வரி, கோயில்கணக்கர் டிமிட்ரோ மற்றும் தூத்துக்குடி ஆதிபராசக்தி மன்றத்தினர், கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ₹19.55லட்சம் உண்டியல் வசூல் appeared first on Dinakaran.

Tags : Muttharaman temple ,Kulasekaranpattinam ,Ebengudi ,Muttharaman ,Kulasekaranpattinam Mutharamman ,Executive Officer ,Gomathi ,Deputy Commissioner ,Sankaranarayan Temple ,Sankarankoil ,Kulasekaranpattinam Mutharaman temple ,
× RELATED திருச்செந்தூரில் நடந்த ஜமாபந்தியில்...