×

கல்வி, வேலைவாய்ப்பில் 3ம் பாலினத்தவரை சிறப்பு பிரிவினராக கருத வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கடந்த 2017-18ல் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2ஏ தேர்வில் கலந்துகொண்ட மூன்றாம் பாலின விண்ணப்பதாரரான அனுஸ் என்பவர், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தன்னை அனுமதிக்குமாறு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பவானி சுப்பராயன், மூன்றாம் பாலினத்தவர்களை சமூக, கல்வி ரீதியாக பின்தங்கியவர்கள் எனக் கருதி, கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து விதமான இடஒதுக்கீட்டு சலுகைகளையும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் 2014ல் தீர்ப்பளித்துள்ளது.

ஆனால், ஒன்றிய அரசோ, மாநில அரசோ இதுசம்பந்தமான விதிகளை வகுக்கவில்லை. மூன்றாம் பாலினத்தவர்களை கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு ஆண்களாகவோ, பெண்களாகவோ கருதாமல் தனி பிரிவினராக கருத வேண்டும். எனவே 2022ம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வில் மனுதாரரின் சான்றிதழை சரிபார்க்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருதியிருந்தால், மனுதாரர் தனது வாழ்க்கையின் வழியை கண்டிருப்பார். உரிய வாய்ப்புகளை வழங்க மறுத்தால், தற்போது சமூகத்தில் உள்ள அசாதாரணமான வாழ்க்கைக்கே தள்ளப்படுவார். எனவே கல்வி, வேலைவாய்ப்பில் அவர்களுக்கு போதுமான வாய்ப்பை வழங்க வேண்டியது அரசின் கடமை என்றும் கூறிய நீதிபதி, அதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

The post கல்வி, வேலைவாய்ப்பில் 3ம் பாலினத்தவரை சிறப்பு பிரிவினராக கருத வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Anus ,Public Service Commission ,Judge ,Bhavani ,Dinakaran ,
× RELATED திருப்பூர் மாணவி முதலிடம்