×

சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ வழக்கில் ஆஜராக அவகாசம் கேட்கிறார் எடியூரப்பா

பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த மமதாசிங் என்பவர் சதாசிவ நகர் போலீஸ் நிலையத்தில் கடந்த மார்ச் 14ம் தேதி புகார் மனு ஒன்று கொடுத்தார். அதில் 2.2.2024 அன்று காலை 11 மணி முதல் 11.30 மணி சமயத்தில் எனது மகளுக்கு முன்னாள் முதல்வர் பி. எஸ். எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தில் தொடரப்பட்ட வழக்கை சிஐடி போலீசார் விசாரிக்கின்றனர்.

வழக்கு விசாரணைக்காக கடந்த ஏப்ரல் 12ம் தேதி எடியூரப்பா நேரில் ஆஜராகினார். விசாரணைக்காக ஜூன் 12ம் தேதி(நேற்று) மீண்டும் ஆஜராக வேண்டும் என்று எடியூரப்பாவுக்கு கடந்த திங்கட்கிழமை சிஐடி போலீஸ் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு தனது வழக்கறிஞர் மூலம் பதில் மனு தாக்கல் செய்துள்ள எடியூரப்பா, தான் டெல்லியில் இருப்பதாகவும் ஜூன் 17ம் தேதி நேரில் ஆஜராகுவதாக கூறி காலவகாசம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

* எடியூரப்பாவை கைது செய்ய சிறுமியின் சகோதரர் வழக்கு

பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ள மனுவில், தனது சகோதரி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியது தொடர்பாக எனது தாய் புகார் கொடுத்தார். அந்த புகார் மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குற்றவாளியாக சேர்க்கப்பட்டவரை கைது செய்யவில்லை. புகார் கொடுத்து 4 மாதங்கள் கடந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையில் புகார் கொடுத்த தாயும் உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். இந்த விஷயத்தில் நியாயம் கிடைக்க வேண்டுமானால் குற்றவாளியை (எடியூரப்பாவை) கைது செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ வழக்கில் ஆஜராக அவகாசம் கேட்கிறார் எடியூரப்பா appeared first on Dinakaran.

Tags : Yeddyurappa ,Bengaluru ,Mamadasingh ,Sadasiva Nagar ,station ,
× RELATED போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜரானார்...