×

தென்னிலை அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது

 

க.பரமத்தி, ஜூன் 12: தென்னிலை அருகே பணம் வைத்து சூதாடிய 2பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து ரூ.200 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தென்னிலை காவல் நிலையத்திற்குட்பட்ட தொண்டுகாளிபாளையம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தென்னிலை போலீசார் அந்த பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது தொண்டு காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் செல்வக்குமார் (44), இதே ஊரை சேர்ந்த ஜெகதீஸ்(20) ஆகிய 2 பேரும் மேற்கண்ட பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை பார்த்து உடனடியாக 2 பேரையும் பிடித்து வழக்குப்பதிந்து கைது செய்தனர். கைதான 2பேரிடம் இருந்து ரூ.200 ரொக்க பணம் பறிமுதல் செய்தனர்.

The post தென்னிலை அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thenlilai ,K. ,Paramathi ,Thenilai ,Thondakalipalayam ,Thenlii ,Dinakaran ,
× RELATED சின்னதாராபுரம் அருகே அரசு பஸ் மீது பைக் மோதி தம்பதியினர் காயம்