×

வெளிமாநில பதிவெண் கொண்டு தமிழ்நாட்டில் இயங்கும் ஆம்னி பேருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

சென்னை :வெளிமாநில பதிவெண் கொண்டு தமிழ்நாட்டில் இயங்கும் ஆம்னி பேருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு பதிவெண் இல்லாமல், தமிழ்நாட்டின் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள ஆம்னி பேருந்துகள் வரும் 14ம் தேதி முதல் மாநிலத்தில் இயங்க அனுமதி இல்லை என அரசுப் போக்குவரத்துத்துறை அறிவிப்பு.வெளியிட்டுள்ளது. முறையற்ற வகையில் வெளிமாநிலத்தில் பதிவு செய்து இயங்கும் ஆம்னி பேருந்துகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

The post வெளிமாநில பதிவெண் கொண்டு தமிழ்நாட்டில் இயங்கும் ஆம்னி பேருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamilnadu government ,Tamilnadu ,Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu ,Omni ,Dinakaran ,
× RELATED முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள்...