×

கோவையில் நடைபெறும் திமுக முப்பெரும் விழா 15ம் தேதிக்கு மாற்றம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் திமுக முப்பெரும் விழா வரும் 14ம் தேதிக்கு பதிலாக, வரும் 15ம் தேதி நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 8ம் தேதி (சனிக்கிழமை) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த “திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா-நாற்பது நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றியளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா – சீர்மிகு வெற்றிக்கு கழகத்தை வழிநடத்திச் சென்ற முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என “முப்பெரும் விழா” ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜூன் 14ம் தேதிக்கு பதிலாக “ஜூன் 15ம் தேதி மாலை 4 மணியளவில் கோயம்புத்தூர் கொடிசியா மைதானத்தில்” நடக்கிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித்தலைவர்கள், வெற்றிபெற்ற நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள். அனைத்து திமுக மாவட்டங்களில் இருந்தும், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய-நகர-பகுதி-பேரூர்-கிளை நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், வாக்குச் சாவடி முகவர்கள், உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கோவையில் நடைபெறும் திமுக முப்பெரும் விழா 15ம் தேதிக்கு மாற்றம்: துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Triennial Festival ,Coimbatore ,Duraimurugan ,Chennai ,General Secretary ,DMK Triennial Festival ,Coimbatore Coimbatore ,President ,M.K.Stalin ,DMK Tripartum Festival ,
× RELATED ‘பாத்ரூமிற்கு போகும்போதும்,...