×

வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது

நெல்லை, ஜூன் 9: தாழையூத்து அடுத்த குறிச்சிகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவன் என்ற பாலு (29). இவர் மீது கடந்த 2021ம் ஆண்டு அடிதடி மற்றும் வழிப்பறி வழக்குகள் தொடர்பாக தாழையூத்து போலீசார் கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவ்வழக்குகள் நெல்லை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்குகளில் சிவன் என்ற பாலு கடந்த ஒரு மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனையறிந்த நீதிமன்றம் தாழையூத்து போலீசார் வழக்குப்பதிந்து சிவன் என்ற பாலுவை கைது செய்து நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிந்து சிவன் என்ற பாலுவை கைது செய்து நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

The post வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Nellai ,Sivan ,Balu ,Kurichikulam South Street ,Thalayuthu ,Bala ,
× RELATED நெல்லையில் ஆவுடையப்பன் தலைமையில் மாணவரணி நேர்காணல் ஆலோசனை கூட்டம்