×

பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

 

ஈரோடு, ஜூன் 8: ஈரோடு மணல்மேடு பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவதாக ஈரோடு தெற்கு போலீசாருக்கு நேற்று முன் தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த பாலாஜி (27), சதாம் உசேன் (26), ஹரிகிருஷ்ணன் (27), மரப்பாலத்தை சேர்ந்த விக்ரம் (26), பாலாஜி கார்டனை சேர்ந்த சாம்பிரகாஷ் (27), சூரம்பட்டி காமராஜ் வீதியை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணன் (25), சூரம்பட்டி, கிராமடை பகுதியை சேர்ந்த விக்னேஷ் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து சீட்டுக்கட்டுகள், பணம் ரூ. 5,350 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

The post பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode South Police ,Sandhill ,Dinakaran ,
× RELATED சூதாடிய 5 பேர் கைது