டெல்லி: 1980களிலேயே பாலஸ்தீனத்தை தனி நாடாக இந்தியா அங்கீகரித்துவிட்டதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். நார்வே, அயர்லாந்து, ஸ்பெயின் நாடுகள் தற்போதுதான் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் இந்தியாவின் முடிவில் மாற்றம் இல்லை என ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.
The post 1980களிலேயே பாலஸ்தீனத்தை தனி நாடாக இந்தியா அங்கீகரித்துவிட்டது: வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் appeared first on Dinakaran.