×

வார இறுதி நாட்களை முன்னிட்டு 1400 சிறப்பு பஸ்கள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்

சென்னை: அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும், பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை (மே 31) 500 பேருந்துகளும், நாளை மறுநாள் (ஜூன் 1) 570 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 130 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக நாளை 500 பேருந்துகளும், நாளை மறுநாள் 570 பேருந்துகளும், சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 65 பேருந்துகளும், நாளை மறுநாள் 65 பேருந்துகள் மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

The post வார இறுதி நாட்களை முன்னிட்டு 1400 சிறப்பு பஸ்கள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Managing Director ,Government Transport Corporation ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பக்ரித் பண்டிகை தொடர் விடுமுறை; 1300...