×

பட்டுக்கூடு வரத்து சரிந்தது

 

தர்மபுரி, மே 29: தர்மபுரி அங்காடிக்கு பட்டுக்கூடு வரத்து சரிந்துள்ளது. தர்மபுரி நான்கு ரோடு அருகே அரசு பட்டுக்கூடு ஏல அங்காடி செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடிக்கு தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஹள்ளி பகுதிகளில் இருந்தும், ஈரோடு சித்தோடு, சத்தியமங்கலம், கரூர், திருவண்ணாமலை பகுதிகளில் இருந்தும் தினமும் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து ஏலத்தில் பங்கேற்கின்றனர்.

தர்மபுரி ஏலங்காடியில் தாங்கள் கொண்டுவரும் பட்டுக்கூடுகளுக்கு அதிகபட்ச விலை கிடைப்பதால் ஏராளமான விவசாயிகள் வந்து ஏலத்தில் கலந்து கொள்கின்றனர். இந்த விவசாயிகளுக்கு ஆன்லைன் மூலம் பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று 2 விவசாயிகள் 34 கிலோ வெண் பட்டுக்கூடுகளை கொண்டு வந்திருந்தனர். இந்தப்பட்டுக்கூடுகள் ₹14 ஆயிரத்து 872க்கு ஏலம் போனது. இவை, அதிகபட்சமாக ₹446க்கும், குறைந்தபட்சமாக ₹410க்கும், சராசரியாக ₹436க்கும் ஏலம் போனது.

 

The post பட்டுக்கூடு வரத்து சரிந்தது appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Bennagaram ,Palakodu ,Marandahalli ,Erode Chithod ,Sathyamangalam ,
× RELATED பள்ளி மாணவன் கல்லால் தாக்கி கொடூர கொலை