×

விவசாயிகள் கூட்டம்

அறந்தாங்கி,மே 24: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் எட்டியத்தளியில் அனைத்து விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்க்கு முருகன் தலைமை வகித்தார்.கூட்டத்தில் எட்டியத்தளி கிராமத்தில் 4 தலைமுறையாக விவசாயம் செய்யும் நிலங்களுக்கு செல் (எப்எம்) வரைபடத்தில் உள்ள படி சாலைக்கு வழிவிட்ட கோரி வரும் 30-ந் தேதி அனைத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி எட்டியத்தளி கடை வீதியில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்தீ தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post விவசாயிகள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Arantangi ,Arantangi Union ,Etiyathali ,Pudukottai district ,Murugan ,Dinakaran ,
× RELATED அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக்...