×

தக்கலை அருகே கால்வாயில் மிதந்த வாலிபர் சடலம் போலீசார் தீவிர விசாரணை

குமாரபுரம், ேம 22: தக்கலை அரு கே உள்ள மூலச்சல் பாலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வில்சன் (35). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். ஆனால் மாலை வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்ைல. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவரை பற்றி எந்த தகவலும் இல்லை. இந்தநிலையில் நேற்று மருதூர்கோணம் பகுதி வழியாக செல்லும் ஒரு கால்வாயில் வில்சன் உடல் மிதந்தது. இந்த தகவல் அறிந்ததும் தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வில்சன் குடிபோதையில் கால்வாயில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தக்கலை அருகே கால்வாயில் மிதந்த வாலிபர் சடலம் போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Thakala ,Kumarapuram ,Wilson ,Moolachal Palapalli ,Thakalai ,Aru K. ,Takkala ,Dinakaran ,
× RELATED மகளை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட விவசாயிக்கு வெட்டு