×

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 5 மாடி கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டலாம்..!!

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய சட்டக் கல்லூரி அருகில் 5 மாடி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்ட தடையில்லை என்று கோர்ட் தலைமைப் பதிவாளர் தெரிவித்துள்ளார். ஐகோர்ட் வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த வழக்கறிஞர் மோகன் வழக்கு தொடர்ந்திருந்தார். ஐகோர்ட் வளாகத்தில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள நிபுணர் குழு அமைத்து மாஸ்டர் பிளான் வகுக்க வேண்டும் என்று மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், பழைய சட்டக் கல்லூரியை இடிக்கப்படாது. அதன் அருகில் தான் ஐந்து மாடி கட்டடம் அமைகிறது என்று ஐகோர்ட் தலைமைப் பதிவாளர் கூறியுள்ளார்.

The post சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 5 மாடி கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டலாம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,CHENNAI ,Chief Registrar ,iCourt ,Dinakaran ,
× RELATED ஜாதி,மத ரீதியாக வாக்கு சேகரிப்பதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு..!!