×

தொழிலாளி திடீர் சாவு

ஸ்பிக்நகர், மே 21: தூத்துக்குடி தங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (63). சமையல் தொழிலாளியான இவர், மனைவியிடம் ஏற்பட்ட தகராறால் தாளமுத்து நகரில் உள்ள தங்கை வீட்டில் வசித்து வந்தார். முத்தையாபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த 18ம் தேதி காலை சமையல் வேலைக்காக வந்த இவர், அங்குள்ள வளாகத்தில் படுத்து தூங்கினார். இரவில் கண் விழித்த அவர், எழுந்துநடந்தபோது தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உதயகுமார் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post தொழிலாளி திடீர் சாவு appeared first on Dinakaran.

Tags : Spignagar ,Udayakumar ,Thoothukudi Thongmammalpuram ,Dalamuthu ,Muthaiapuram ,
× RELATED பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது