மும்பை: மகாராஷ்டிராவில் நேற்று முன்தினம் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, மறைந்த சுதந்திர போராட்ட வீரர் சவார்கர் குறித்து ஒருபோதும் விமர்சிக்க மாட்டேன் என்று ராகுல்காந்தி உறுதியளிக்க சொல்லுங்கள் என்று சரத்பவாரை விமர்சித்து இருந்தார். இந்நிலையில் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி(எஸ்பி) தலைவர் சரத்பவார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சிவசேனா(யூபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய சரத்பவார்‘‘விநாயக் தாமோதர் சவார்கர் என்பது தேர்தல் பிரசாரத்தில் பேசவேண்டிய விவகாரம் இல்லை. அவரை பற்றி ராகுல்காந்தி எதுவும் பேசவில்லை. ஆனால் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியின் பேச்சானது பிளவை உருவாக்குவது, தூண்டுதல் மற்றும் வாக்காளர்களை பிரிக்கும் வகையில் இருந்தது. இதுபோன்ற ஒரு பிரதமரை நான் பார்த்தது கிடையாது” என்றார்.
The post வாக்காளர்களை பிரிப்பதற்கு பிரதமர் முயற்சி: சரத்பவார் விமர்சனம் appeared first on Dinakaran.