×

வெயிலில் சுருண்டு விழுந்து ஒருவர் பலி

வேலூர், மே 16: காட்பாடி அருகே சாலையில் நடந்து சென்ற அடையாளம் தெரியாத ஒருவர் வெயிலில் சுருண்டு விழுந்து பலியானார். காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை தனியார் கல்லூரி பஸ் நிறுத்தம் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் நேற்று நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி ரோட்டில் விழுந்தார். இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அவர் இறந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. பேன்ட் சட்டை அணிந்திருந்த அவர் அனேகமாக காட்பாடி வட்டாரத்தை சேர்ந்த ஏதாவது ஒரு கிராமத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் வேலூர் மாவட்டத்தில் நேற்று 101.7 டிகிரி வெயில் பதிவான நிலையில், வெயில் காரணமாக சுருண்டு விழுந்து இறந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. இதுதொடர்பாக காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு ெசய்து இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வெயிலில் சுருண்டு விழுந்து ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Vellore ,Gadpadi ,Katpadi ,Christianpet ,Dinakaran ,
× RELATED கந்து வட்டி வசூலித்த பெண் கைது பைக்குகள், ஏடிஎம் கார்டுகள் பறிமுதல்