×

ஆந்திராவில் 81.86% வாக்குப்பதிவு: மாநில தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

திருமலை: ஆந்திர மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் மாநில சட்டப்பேரவைதேர்தலும் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்த நிலையில் வேலகம்புடியில் உள்ள தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் மீனா நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றாலும் பெரும்பாலும் அமைதியாக நடைபெற்றது. ஒரு சில இடங்களில் நள்ளிரவு 2 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மக்களவை தேர்தலில் 3 கோடியே 33 லட்சத்து 40 ஆயிரத்து 560 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு செய்த வாக்காளர்களில் சிலர் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை. இதனால் சட்டமன்ற தேர்தலில் 3 கோடியே 33 லட்சத்து 40 ஆயிரத்து 333 பேர் மட்டுமே வாக்குப்பதிவு செய்தனர். மக்களவை தேர்தலில், தபால் வாக்குகள் சேர்த்து மொத்தம் 81.86 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆந்திராவில் 81.86% வாக்குப்பதிவு: மாநில தலைமை தேர்தல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Chief Electoral Officer ,Tirumala ,Andhra ,Lok Sabha elections ,assembly elections ,Mukesh Kumar Meena ,Velakambudi ,Legislative Assembly ,
× RELATED ஆந்திராவில் வாக்கு எண்ணிக்கை...