×

செல்போன் திருடியவர் சிறையில் அடைப்பு

திருச்சி, மே 15: திருச்சி அரசு மருத்துவனையில் சிகிச்சையில் இருந்த நோயாளியின் மகன் செல்போன் திருடியதாக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல் (25). இவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உதவிக்காக உடன் இருந்தார். அப்போது அங்கு வந்த கரூர் மாவட்டம் பரமத்தி வேலூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சக்திவேலின் செல்போனை திருடியதாக தெரிகிறது.

திருடியதை கவனித்துவிட்ட சக்திவேல் அவரை கையும் களவுமாக பிடித்து அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து போலீசார் கார்த்திகேயன் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post செல்போன் திருடியவர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trichy Government Hospital ,Sakthivel ,Narasinghapuram ,Satharyur ,Trichy district ,
× RELATED திருச்சி ஜிஹெச்சில் கொடூர சம்பவம்:...