×

குளத்தில் முதியவர் சடலம் மீட்பு

சூலூர், மே 15: கோவை மாவட்டம் சூலூரில் உள்ள பெரிய குளத்தில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக சூலூர் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குளத்தில் சடலமாக கிடந்த உடலை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மீட்டு விசாரித்தனர். விசாரணையில் இறந்தவர் யார்? என தெரியவில்லை. சடலமாக கிடந்தவருக்கு சுமார் 60 வயது இருக்கும். இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி உயிரிழந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குளத்தில் முதியவர் சடலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Sulur ,Sulur police ,Sulur, Coimbatore ,
× RELATED 2 மகளுடன் குட்டையில் மூழ்கி பூசாரி பலி