×

விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தாவரவியல் பூங்கா ஜொலிக்கிறது

ஊட்டி,மே12: ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் இரவில் ஜொலிக்கும் அதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். ஆண்டுதோறும் கோடைகாலமான மே மாதம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று முன்தினம் 126வது மலர் காட்சி துவங்கியது. முதல் நாளான நேற்று முன்தினம் மலர் கண்காட்சியை தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா துவக்கி வைத்தார். இந்த மலர் கண்காட்சியில் பல லட்சம் மலர்களால் ஆன டிஸ்னி வேர்ல்டு, மலை ரயில், உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர். மேலும், ஊட்டி ரோஜா பூங்காவில் பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன இதனையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

மேலும் ஊட்டி தாவரவியல் பூங்கா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு தாவரவியல் பூங்காவில் முதல் முறையாக லேசர் ஷோ நடைபெற்றது. இதனை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். லேசர் சோவை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்,வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள பூங்காவையும் இரவில் கண்டு ரசித்து சென்றனர். மேலும் இந்த அலங்காரங்கள் முன்பு புகைப்படங்களும் எடுத்துச் சென்றனர்.

The post விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தாவரவியல் பூங்கா ஜொலிக்கிறது appeared first on Dinakaran.

Tags : Ooty ,Government Botanical Garden ,Ooty Government Botanical Garden ,Illuminated ,Botanical ,Garden ,
× RELATED மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள...