×

கால்நடை மருத்துவமனையில் பணியாற்றி உயிரிழந்த உதவியாளரின் குடும்பத்திற்கு நிதி உதவி

ஈரோடு, மே 12: ஈரோடு மாவட்டம் கோபி கால்நடை பன்முக மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றிய லட்சுமணன் கடந்த 7ம் தேதி இயற்கை மரணம் அடைந்தார். இதையடுத்து, அவரது குடும்பத்திற்கு நியூமன் நவமணி குடும்ப பாதுகாப்பு நலத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சுப்பணி அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக ரூ.50 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கோபி, மாநில துணை தலைவர் சின்னையசாமி, மாநில இணை செயலாளர் கபில்தேவ், மாநில தணிக்கையாளர் சீனிவாசன், ஈரோடு மண்டல அலுவலக நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ், இளநிலை உதவியாளர் ஆனந்த மணவாளன் ஆகியோர் உடன் இருந்தனர். இத்தகவலை, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சுப்பணி அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சங்கர் தெரிவித்துள்ளார்.

The post கால்நடை மருத்துவமனையில் பணியாற்றி உயிரிழந்த உதவியாளரின் குடும்பத்திற்கு நிதி உதவி appeared first on Dinakaran.

Tags : Erode ,Lakshmanan ,Gobi Veterinary Hospital ,Erode district ,Tamil Nadu Animal Husbandry Department ,
× RELATED மின் விபத்து குறித்து தகவல் தெரிவிக்க தொடர்பு எண் அறிவிப்பு