×

மணல் கடத்திய லாரி பறிமுதல்

ஓசூர், மே 12: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அட்கோ போலீசார் தொடுதேப்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் கேட்பாரின்றி நின்ற டிப்பர் லாரியில் சோதனையிட்டனர். அதில், 6 யூனிட் மணல் இருந்தது. அதனை கடத்தி வந்தவர்கள், போலீசார் ரோந்து வருவதை அறிந்து மணலுடன் லாரியை அங்கேயே விட்டுச் சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த போலீசார், உரிமையாளர் மற்றும் டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், எந்த பகுதிக்கு மணல் கடத்திச் செல்லப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மணல் கடத்திய லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Hosur ,Krishnagiri District ,ADCO ,Thothepally ,Dinakaran ,
× RELATED தனியார் நிறுவன ஊழியரிடம் ஆன்லைனில் ₹11 லட்சம் மோசடி