×

பாடாலூர் அருகே விபத்து பைக் மீது கார் மோதல்: பெண் பலி

பாடாலூர், மே 12: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலியானார். ஆலத்தூர் தாலுகா தேனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மனைவி ரம்யா (27). இவர் நேற்று மாலை பெரம்பலூர்- துறையூர் நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெரம்பலூரில் இருந்து துறையூர் நோக்கி சென்ற கார் பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ரம்யா இறந்தார். இது குறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பெரம்பலூர் மாவட்ட அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாடாலூர் அருகே விபத்து பைக் மீது கார் மோதல்: பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Padalur ,Aladhur taluk ,Sakthivel ,Ramya ,Thenur ,Perambalur-Dhartiyur highway ,Badalur ,Dinakaran ,
× RELATED பாம்பு கடித்து பள்ளி மாணவி பரிதாப சாவு