×

பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் கோடை கால பயிற்சிமுகாம் நிறைவு விழா

பெரம்பலூர்,மே.11: பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில், கோடை கால பயிற்சிமுகாம் நிறைவு விழா நேற்று நடை பெற்றது. திருச்சிராப்பள்ளி மண்டல கலை பண்பாட்டு மையத் தின் கலை பண்பாட்டுத் துறை மற்றும் பெரம்பலூர் சவகர் சிறுவர் மன்றம், பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆகியவற் றின் சார்பாக கோடைகால பயிற்சி முகாம் கடந்த 1ம் தேதி புதன்கிழமை தொடங்கி நேற்று வரை நடைபெற்று வந்தது. முகாமின் நிறைவு விழா நேற்று பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி வளா கத்தில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டக் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) நாகவள்ளி சிறப்பு விருந்தி னராகக் கலந்து கொண்டு கோடைகால பயிற்சி முகா மில் பங்கேற்ற அனைத்து மாணவ,மாணவியருக்கும் சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் திட்ட அலுவலர் யோகேஸ்வரன், சிலம்பம் ஆசிரியர் முருகேசன், பரதநாட்டியம் சுவிதா, ஓவியம் ஹேமா, குரலிசை ஆசிரியர் ராஜேஸ்வரி மற்றும் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் கோடை கால பயிற்சிமுகாம் நிறைவு விழா appeared first on Dinakaran.

Tags : Summer Training Camp Closing Ceremony ,Perambalur ,District Government ,School of ,Music ,Perambalur District Government Music School ,Tiruchirappalli Regional Art and Culture Center Department of Arts and Culture ,Perambalur Savakar Children's Forum ,Perambalur District ,Perambalur District Government Music School Summer Training Camp Closing Ceremony ,Dinakaran ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...