×

கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு

விழுப்புரம், மே 11: பைக்கில் சென்ற பெண்ணிடம் செயின் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் அருகே பாப்பனப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி புவனேஸ்வரி(48). இவர் நேற்றுமுன்தினம் இரவு தனது கணவருடன் பைக்கில் விழுப்புரம் நோக்கி வந்துகொண்டிருந்தார். அய்யூர் அகரம் மேம்பாலத்தில் வந்துகொண்டிருந்தபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், புவனேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். இதில் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்த புவனேஸ்வரிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த புவனேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து புவனேஸ்வரி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பைக்கில் செல்லும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பு சம்பவம் அரங்கேறி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 6 பவுன் செயின் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Venkatesan ,Pappanapattu ,Bhubaneswari ,
× RELATED மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக கூறப்பட்ட...