×

வத்திராயிருப்பு அருகே ட்ரோனில் மருந்து தெளிக்கும் விவசாயிகள்: நெற்கதிர்களில் குலைநோய் தாக்குதலை தடுக்க தீவிரம்

வத்திராயிருப்பு, மே 10: வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கான்சாபுரம், அத்திகோவில், தாணிப்பாறை, கூமாபட்டி, நெடுங்குளம் கொடிக்குளம், ரகுமத்நகர், சுந்தரபாண்டியம், சேதுநாராயணபுரம், இலந்தைகுளம், கோட்டையூர், மகாராஜபுரம், மாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் கோடைகால நெல் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நெற்பயிர்கள் கதிர் விட்டு பால் வைக்க ஆரம்பித்துள்ளது. கதிர்கள் விளைந்து அறுவடைக்கு இன்னும் ஒரு மாத காலம் உள்ள சூழ்நிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் குலை நோய் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இந்த நோய் தாக்கத்திலிருந்து பயிர்களை காப்பாற்றுவதற்காக இப்பகுதியில் உள்ள விவசாயிகள் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியினை செய்து வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கோடைகால நெல் விவசாயப் பணியினை விவசாயிகள் செய்து வருகின்றோம். இந்த நிலையில் இன்னும் அறுவடைக்கு ஒரு மாத காலம் உள்ள சூழ்நிலையில் நெற்பயிர்கள் கதிர்கள் விட்டு பால் வைக்க ஆரம்பித்து உள்ளது. கோடை வெயிலின் தாக்கத்தால் குலைநோய் தாக்கம் ஏற்பட்டு நெற்பயர்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் தாக்கத்திலிருந்து நெற்பயிர்களை காப்பாற்றுவதற்காக விவசாயிகள் ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். சம்பந்தப்பட்ட வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நோய் தாக்கத்திலிருந்து பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

The post வத்திராயிருப்பு அருகே ட்ரோனில் மருந்து தெளிக்கும் விவசாயிகள்: நெற்கதிர்களில் குலைநோய் தாக்குதலை தடுக்க தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Vathrayiru ,Vathrairipu ,Kansapuram ,Atthikovil ,Thaniparai ,Coomapatti ,Nedungulam Kodikulam ,Rakumatnagar ,Sundarapandyam ,Sethunarayanapuram ,Ilanthikulam ,Kottayur ,Maharajapuram ,Mathur ,Vathiraipuram ,
× RELATED அரசு ஆஸ்பத்திரியில் வெப்ப அலை விழிப்புணர்வு